Tuesday, November 30, 2010

[lyric] தீ தீராதே

பாடல் : தீ தீராதே
படம் : சிங்கையில் குருஷேத்திரம்
இசை : முகமது ரஃபி
இயக்கம் : தவமணி
______________________

தோழா!

தீ தொட்டால் பட்டால்

சுட்டால் அஞ்சாதே!


நீயாடு தோழா!

ஓ முட்டுக் கட்டை

இட்டால் அஞ்சாதே!


காலோடு தோழா!

Gravity மாத்தி

விட்டால் அஞ்சாதே!


ஒஹோஹோ தோழா!

Graffiti போட்டா

வானம் மிஞ்சாதே!


தீ தீராதே உன்னுள் தீ தீராதே!

தீ தீராதே ஒருபோதும் நீ தீ தீராதே!

_____________________

ஏழும் சனிக்கிழமை

போதை பிறப்புரிமை

பாதை கொஞ்சம் திருத்தியமை

எங்கள் இளமை எங்கள் அடிமை


நாங்கள் நடனப்படை

நாளும் நிலவுநடை

நாடிக்கேது வேகத்தடை

எங்கள் வானில் ஏது ஒட்டடை


நெஞ்சில் அச்சம் இல்லை

இலட்சியங்கள் தொல்லை

பூமிக்குள்ளும் சென்று

விரியும் எங்கள் எல்லை


அன்னை தந்தை இல்லை - நாம்

கண்ணீர் விட்டதில்லை

நண்பன் கொண்ட யாரும்

அனாதை ஆனதில்லையே!

___________________

மூளை முடக்கிவிடு

தேகம் முடுக்கிவிடு

வேதனைகள் முடித்துவிடு

இந்த இரவில் இன்பம் திருடு!


நேற்றை மறந்துவிடு

காற்றில் பறந்துவிடு

கோபதாபம் திறந்துவிடு

உன்னை வெளியிலே திரையிடு!


சாலை உந்தன் வீடு

நீயே உந்தன் ஏடு

மேடை ஏறும் போது

சட்டங்கள் உதவாது


சத்தங்கொஞ்சம் கூட்டு - உன்

பித்தங்கொஞ்சம் காட்டு

பூமி மொத்தம் தூக்கி

பந்தாட்டம் ஆடு கூட்டாளி!

____________________________


Wednesday, November 10, 2010

[lyric] நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

பாடல் : நெஞ்சில் நெஞ்சில்
படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : பிரபு தேவா
___________________

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வேளை வேலை காட்டுதோ - என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
___________

ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!

வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?

உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)
___________________

பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!

ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே

விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)