Friday, April 15, 2011

[lyrics] துறுதுறு கண்ணில்

படம் : 180

பாடல் : துறுதுறு கண்ணில்

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


துறுதுறு கண்ணில்

துரு நீங்கும் போது

சிறுசிறு கனவுகள்

சிறகு சூடும்


நாளை போடும்

சேதித் தாள் - எந்தன்

பேரைக் காட்டுமே


எல்லைத் தாண்டி

நோபல் பரிசு என்

கைக்கெட்டுமே


நோயில்லாத

பூமிப் பந்தொன்றை

நானே கட்டுவேன்


தாயின் கண்ணில்

இன்பம் உண்டாக்க

விண் முட்டுவேன்


துறுதுறு கண்ணில்

துரு நீங்கும் போது

சிறுசிறு கனவுகள்

சிறகு சூடும்


புதிய புதிய உலகம் வேண்டாமே

நேற்றுலகம் நான் காண்பேன்

தூசில்லா பூங்காற்றிலே


மழைகள் விழ

விசை செய்வேன்

விழிகள் அழ

தடை போடுவேன்


கனவை

விதை எனப் புதைக்கிறேன்


துறுதுறு கண்ணில்

துரு நீங்கும் போது

சிறுசிறு கனவுகள்

சிறகு சூடும்


திரையால் மூடும்போதும் - விண்ணில்

தீ மறைவதில்லை

பசியால் வாடும் போதும் - கண்ணில்

தீ குறைவதில்லை


பல நாள் இருளும்

ஒரு நாள் சுருளும் எனவே!

மருளும் மனதில்

ஒளியாய் திரளும் கனவே!


கனவெல்லாம் கூடுமே

கைகள் கூடும் வேளையில்

இருளெல்லாம் தீயுமே

தீயில்...

-----

[lyrics] நீ கோரினால்

படம் : 180

பாடல் : நீ கோரினால்

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


நீ கோரினால்

வானம் மாறாதா! - தினம்

தீராமலே

மேகம் தூறாதா!

-----

தீயே இன்றியே - நீ

என்னை வாட்டினாய்

உன் ஜன்னலை அடைத்தடைத்து

பெண்ணே ஓடாதே!


ஓடும் ஓடும்

அசையாதோடும் அழகியே!

------

கண்டும் தீண்டிடா- நான்

போதிச் சாதியா

என் மீதிப் பாதி பிம்பப் பூவே

பட்டுப் போகாதே.


போதை ஊறும்

இதழின் ஓரம் பருக வா.

----

[lyrics] சந்திக்காத கண்களில்

படம் : 180

பாடல் : சந்திக்காத கண்களில்

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


சந்திக்காத கண்களில்

இன்பங்கள்

செய்யப்போகிறேன்

சிந்திக்காது சிந்திடும்

கொண்டலாய்

பெய்யப்போகிறேன்


>அன்பின் ஆலை ஆனாய்

>ஏங்கும் ஏழை நானாய்

>தண்ணீரைத் தேடும் மீனாய்

------

>ஊகம் செய்தேனில்லை

>மோகம் உன் மீதானேன்


கதைகள் கதைகள் கதைத்து

விட்டுப் போகாமல்?

விதைகள் விதைகள் விதைத்து

விட்டுப் போவோமே


திசையறியா பறவைகளாய்

நீ நான் நீள் வான்

வெளியிலே... பறக்கிறோம்

------

>போகும் நம் தூரங்கள்

>நீளம் தான் கூடாதா?


இணையும் முனையம் இதயம்

என்று ஆனாலே

பயனம் முடியும் பயமும்

விட்டுப் போகாதோ


முடிவறியா

அடிவானமாய்

ஏன் ஏன் நீ நான்

தினந்தினம்

தொடர்கிறோம்?

------

[lyrics] ஏஜே

படம் : 180

பாடல் : ஏஜே

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


ஏஜே

ஏஜே

மனம் மறைப்பதேன்? ஏஜே


பார்வை கூறும் வார்த்தை நூறு

நாவில் ஏறும் வார்த்தை வேறு

நாணம் தீரும் - நீ இவளை பாரு

மனதை கூறு

மனம் மறைப்பதேன்? ஏஜே

----

நாடியைத் தேடி உனது

கரம் தீண்டினேன்

நாழிகை ஓடக் கூடா

வரம் வேண்டினேன்


மனதினை மெல்வேனோ?

சில யுகம் கொள்வேனோ?

சொல்வேனோ?

----

மேல்விழும் தூறல் எனது

ஆசை சொன்னதா?

கால்வரை ஓடி எனது

காதல் சொன்னதா?


அருகிலே வந்தாடும்

இருதயம் நின்றோடும்

திண்டாடும்

-----

[lyrics] உவெசுலா ஊது

படம் : 180

பாடல் : உவெசுலா ஊது

இசை : ஷரத்

இயக்கம் : ஜெயேந்திரா


உவெசெலா ஊது

rules கிடையாது

கிழியட்டும் காது Yo!


பொஹரபோ பீட்டு

கிளப்புது ஹீட்டு

அதிருது ஸ்ட்ரீட்டு Yo!

-----

நிகழ் நிகழ் காலம்

இதோ இதோ போச்சு!

புகழ் பணம் மூச்சு

தினம் செலவாச்சு!


மேகமாய் பறக்க - நீ

ஊது உவெசெலா

வானத்தை திறக்க - நீ

ஊது உவெசெலா...

-----

தினந்தினந் தூங்க

இமை படச்சானா ?

உனக்குள்ளே பாக்க

கதவடச்சானா?


சாமியும் விழிக்கும் நீ

ஊது உவெசெலா!

பூமியே செழிக்கும் நீ

ஊது உவெசெலா!

-----