Wednesday, November 07, 2012

[lyric] மேகத்திலே மேலாடை


Shrishti Cinemas
வெற்றிச்செல்வன்
மேகத்திலே மேலாடை
இசை : மணிசர்மா
இயக்கம் : ருத்ரன்
குரல் : ஷ்ரேயா கோஷல்
___________________________________


மேகத்திலே மேலாடை
காலை நிலா, காலாடை
ஊலலலா உள்ளந்தான்
நானணியும் உள்ளாடை

புல் மீது தூங்குவேன்
அதுவே என் மாளிகை
செல் என்ற பின்புதான்
நகரும் என் நாழிகை 

என் பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
என் விழியால் அதை நீ பாரு


பூ ஒன்று திறக்கும் போது
இமைதட்டிச் சிரிப்பேனே
ஈ மீது பூ உதிர்ந்தாலோ
இரண்டுக்கும் அழுவேனே

தேய்பிறை அதன் சோகம் கண்டால்
தேவதை அதில் ஊஞ்சல் செய்வேன்
தேவைகள் ஏதும் இல்லை என்றால்
தெய்வமே இனி நான் தானே

யாரும் இல்லாத போதில்
சத்தமில்லாமல் காதில்
எந்தன் பேர் சொல்லி காற்றும் வீசும்

பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு


வானோடு மழை வரக் கூடும்
மின்னல் போடும் மின்னஞ்சல்
புயல் ஒன்றின் தொலைநகலாகும்
இன்று வீசும் மென் தென்றல்

தூறலே குறுஞ்செய்தி ஆகும்
வானவில் பின்னணியில் தோன்றும்
அழைக்கிறாய் ஒரு இரகசியம் சொல்ல
அருவிகள் அழைப்பொலியாகும்

பேச காசேதும் இல்லை
ஊரும் ஏன் பேச வில்லை
ஊடகம் எங்கும் விளம்பரம் உனக்கில்லை


பூமி பூமி இது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
பூமி பூமி அது வேறு
இவள் விழியால் அதை நீ பாரு
_____________________________________




No comments: